முதுகுளத்தூர் தொகுதியில் காங். வெற்றியைக் கொண்டாடிய தொண்டர்கள்
முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பாண்டி வெற்றி பெற்றதை திமுக, காங்கிரஸ் கட்சியினர் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
முதுகுளத்தூர் பேருந்து நிலையம், தேவர்சிலை, சுந்தரலிங்கம் சிலை, காந்திசிலை ஆகிய இடங்களில் திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் போஸ், மாவட்டச் செயலாளர் திருமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பையா, நகர் தலைவர் என்.சுரேஷ்காந்தி, திமுக நகரத் தலைவர் ஷாஜகான், திமுக ஒன்றியச் செயலாளர்கள் பூபதிமணி (கிழக்கு), முத்துராமலிங்கம் (தெற்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கமுதியில்… கமுதியில் பேருந்து நிலையம், தேவர்சிலை, மருதுபாண்டியர் சிலை ஆகிய இடங்களில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம், பெருநாழி போஸ், காங்கிரஸ் மாவட்ட எஸ்.சி. பிரிவுத் தலைவர் சரவணகாந்தி, வட்டாரத் தலைவர்கள் நவனீதன், கதிர்வேல், அபிராமம் போத்தி, நகர் தலைவர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடலாடி,சாயல்குடி.. பகுதிகளில் காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் வேலுச்சாமி தலைமையில் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினர். நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் டி.ராஜசேகர், காங்கிரஸ் கிழக்கு வட்டாரத் தலைவர் தனசேகரன், மேற்கு வட்டாரத் தலைவர் சுப்பிரமணிய சேர்வை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.