முதுகுளத்தூர்- காத்தாகுளம் நடுரோட்டில் திடீர் பள்ளம்

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர்- காத்தாகுளம் ரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இந்த ரோட்டில் மாரந்தை வழியாக, ஓரிவயலுக்கு தினமும் 6 முறை அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

காத்தாகுளம் அருகே உள்ள கீழமானாங்கரை விலக்கு அருகே நடுரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்திற்குள் சிக்கி விடாதபடி, கீழமானாங்கரை கிராம மக்கள் பள்ளத்திற்குள் கம்புகளை ஊன்றி, சிவப்பு கொடியை கட்டி வைத்துள்ளனர்.

இதனால் பகலில் கவனமாக செல்லும் வாகன ஓட்டிகள், இரவில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அந்த பள்ளத்தை மூடி, சாலையை
செப்பனிட நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

News

Read Previous

ஆப்பிளுக்குப் பதிலாக கேரட்டைப் பயன்படுத்துங்கள்!

Read Next

சாத்தனூர் கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published.