முதுகுளத்தூர் அருகே மர்மக் காய்ச்சல்: மருத்துவக் குழு ஆய்வு
முதுகுளத்தூர் அருகே எஸ்.பி. கோட்டை கிராமத்தில் 5 பேருக்கு மர்மக் காய்ச்சல் வந்ததைத் மருத்துக்குழுவினர் 2 நாள்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எஸ்.பி. கோட்டை கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் 2 நாள்களுக்கு முன் 5 பேருக்கு காய்ச்சல் கண்டுள்ளது. அவர்கள் அருகில் உள்ள முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். சில நாள்களுக்கு பிறகு மீண்டும் அவர்களுக்கு காய்ச்சல் வந்ததால் சுகாதாரத்துறையினரிடம் ஊராட்சித் தலைவர் சுந்தர்ராஜன் தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் கடந்த 2 நாள்களாக மருத்துவக் குழுவினர் அங்கு முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சுத்தமில்லதாத குடிநீரால் காய்ச்சல் வந்திருக்கலாம் எனவும் கிராமத்தினருக்கு பரிசோதனை செய்து தொற்று நோய்கள் பரவாமல் இருக்க மருத்துவர்கள் தடுப்பூசியும் போட்டு வருகின்றனர். கிராமத்தில் இருக்கும் குடிநீர் தொட்டிகளில் தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க சுகாதாரத் துறை அதிகாரிகளை மருந்துகளை தெளித்தனர்.