1376 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை: அமைச்சர் வழங்கினார்
முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை 1376 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகளை அமைச்சர் சுந்தர்ராஜன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகளை 1376 பயனாளிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பரமக்குடி துணை ஆட்சியர் சமீரான், மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் எஸ்.ராமமூர்த்தி வரவேற்றார்.
விழாவில் மாவட்ட கவுன்சிலர் சதன்பிரபாகர், இளைஞரணி துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மீனவரணி செயலாளர் பா.முருகேசன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.ரவிச்சந்திரன், தொழிற்சங்க நிர்வாகிகள் வடிவேலு, முத்துராமலிங்கம், இலக்கிய அணி தலைவர் அம்சுராஜ், ஜெ.பேரவை இணைச் செயலாளர் கே.அர்ச்சுணன், விவசாய அணி இணைச் செயலாளர் வி.கருப்புசாமி, ஊராட்சி தலைவர்கள் சங்கரவேல், முத்துகருங்கு, கருப்புச்சாமி, பேரையூர் ராமசாமி, நகர் விவசாய அணிச்செயாளர் கூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் ஊராட்சி தலைவர் யுவராஜ் செல்வராணி நன்றி கூறினார்.