முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகாசனப் பயிற்சி

Vinkmag ad

முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, நேரு யுவகேந்திரா மற்றும் வாழும் கலை சார்பில் யோகாசனப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

  ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ளதை அடுத்து, அன்றைய தினம் முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

     எனவே, நேரு யுவகேந்திரா மற்றும் வாழும் கலை சார்பில், பள்ளியின் என்.சி.சி. பிரிவு தலைவர் லெப்டினன்ட் கர்னல் அன்சார் மற்றும் அலுவலக மேலாளர் பாண்டியராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில், என்.சி.சி. மாணவ, மாணவியருக்கு வியாழக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.   இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை விஜிலாமேரி தலைமை வகித்தார். நேரு யுவகேந்திர ஒருங்கிணைப்பாளர் துரை முருகன், ஆசிரியர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   நேரு யுவகேந்திரா மற்றும் வாழும் கலை சார்பில், சக்திவேல், குணபாபு ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, தேசிய மாணவர் படை அலுவலர் துரைப்பாண்டியன் செய்திருந்தார்.

News

Read Previous

சென்னை நலத்தகவல்

Read Next

வீடு

Leave a Reply

Your email address will not be published.