முதுகுளத்தூரில் 120 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை 120 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆறு வகையான உணவு வகைகளுடன் கூடிய இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை, முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. எம். முருகன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவர் ஐ. சுதந்திரகாந்தி இருளாண்டி, ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் பரம்பொருள் காளிமுத்து, நகர் அவைத் தலைவர் வி. கருப்பசாமி, கவுன்சிலர்கள் முருகன், தூரி.எம். மாடசாமி, பாசறைச் செயலர் மாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.