முதுகுளத்தூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்
முதுகுளத்தூரில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் சுந்தர்ராஜன் வழங்கினார்.
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அன்வர் ராஜா எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட அதிமுக செயலர் ஆர்.தர்மர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் தலைமை வகித்து மாணவ, மாணவிகள் 164 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்றார். விழாவில் வட்டாட்சியர் கே.கே.கோவிந்தன், மாவட்டக் கல்வி அலுவலர் ரெங்கநாதன், பள்ளித்துறை ஆய்வாளர் லோகு முருகன், அண்ணா தொழிற்சங்க செயலர் சேதுபதி, பாசறை ஒன்றியச் செயலர் மாரி, ஒன்றிய இளைஞரணி செயலர் மாடசாமி, வழக்குரைஞர் பிரிவு இணைச்செயலர் அழகுமுத்து, கூட்டுறவு தலைவர் பரம்பொருள் காளிமுத்து, விவசாய அணி இணைச்செயலர் வீ.கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் என்.சி.சி.திட்ட ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் நன்றி தெரிவித்தார்.