முதுகுளத்தூரில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: 68 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு  68 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.25,000-க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாலிக்கு தங்கம் மற்றும் காசோலைகளை முதுகுளத்தூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் எம்.முருகன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் சுதந்திரகாந்தி இருளாண்டி, ஆணையர் ராதா கிருஷ்ணன், இளம்பெண்கள் பாசறைச் செயலர் வி.கே.சி முத்துராமலிங்கம், அதிமுக நகர துணைச் செயலாளர் சி.தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலாடி:கடலாடியில் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் எம்.கே. முனியசாமி பாண்டியன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை எம்.எல்.ஏ முருகன் தொடக்கி வைத்தார். விழாவில் ஒன்றியக் கவுன்சிலர் போஸ், ராமர், அவைத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாயல்குடி: சாயல்குடியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் எம்.எல்.ஏ. முருகன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஒன்றிய செயலாளர் அந்தோனிராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.செய்யது காதர், நகர செயலாளர் சுப்பிரமணியன், கூட்டுறவு தலைவர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கமுதி: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கோட்டைமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆர்.சி. கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. கௌரவ உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் எம்.எல்.ஏ முருகன் தலைமை வகித்தார். விழாவில் கமுதி ஒன்றியக்குழுத் தலைவர் டி.பாலு, துணைத் தலைவர் மணிமுத்து, மாவட்ட கவுன்சிலர் முத்துராமலிங்கம், இளைஞர்கள் பாசறை செயலர் வி.கே.சி முத்துராமலிங்கம், நகரச்செயலாளர் கந்து இக்பால் முன்னால் சேர்மன் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவில்களில் சிறப்பு வழிபாடு: முதுகுளத்தூரில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமையில் விநாயகர் கோயில், சுப்பிரமணியர் கோயில், கொடுமலூர் குமரன் கோயில், செல்விஅம்மன் கோயில், அய்யனார் கோயில் ஆகிய கோயில்களில் பொங்கல் வைத்து சிறப்பு  வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தி அன்னதானம் நடைபெற்றது. பின்பு முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் முருகன் அதிமுக கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.விழாவில் ஒன்றியக்குழுத் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி, கவுன்சிலர்கள் உடை எம்.சிவக்குமார், தூரி எம்.மாடசாமி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் என்.ரவிச்சந்திரன், அப்துல் லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், நகர் அவைத் தலைவர் வி.கருப்புசாமி, மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ராமலெட்சுமி, நகர் மகளிரணி செயலாளர் மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

இஞ்சியில் உள்ள சத்துக்கள்

Read Next

வேறுபட்ட மனங்கள் இணைய உணவு டிப்ளமசி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *