முதுகுளத்தூரில் பிளாஸ்டிக் பை ஒழிப்பு பிரசாரம்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், முதுகுளத்தூரில் உள்ள 15 வார்டுகளிலும் முற்றிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் சசிவர்ணம் ராமர் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி, துணைத் தலைவர் பாசில் அமீன், உதவிச் செயற்பொறியாளர் குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வார்டு முழுவதும் சென்று பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்தல், கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளை கொட்டாமல் தவிர்த்தல், வீடுதோறும் கழிப்பறை அமைத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.