முதுகுளத்தூரில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் வட்டார வள மையத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது.
முதுகுளத்தூர் வட்டார வள மைத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 63 பள்ளிகளை சார்ந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பள்ளி மேலாண்மை குழுவின் கடமைகள், அவர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்கப்பட்டது.
இதில் ஆசிரியர் பயிற்சி மைய பயிற்றுனர்கள் விஜயா, எஃப்ரோம், உமாமகேஸ்வரி, கார்மேகம், முருகவேல், காமராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார்கள்.
பயிற்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தினகர்ராஜ் உரையாற்றினார். இதற் கான ஏற்பாடுகளை அலிமாபேகம் செய்திருந்தார்.