முதுகுளத்தூரில் ஜல்லிக்கட்டு
கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதியம் 2 மணியளவில் தொடங்கி 15 மாடுகளுக்கு மேல் அவிழ்த்து விடப்பட்டன. மாடுகளை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப் பரிசும், குத்து விளக்கும் பரிசாக வழங்கப்பட்டன. கமுதி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதே போன்று முதுகுளத்தூர் அருகே மேலத்தூவல், கமுதி அருகே பெருநாழி ஆகிய கிராமங்களிலும் ஜல்லிக்கட்டுகள் நடைபெற்றன.