முதுகுளத்தூரில் குமரிஅனந்தன் நடைபயணம்
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி முதுகுளத்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு நடைபயணத்தை தொடர்ந்தார்.
முதுகுளத்தூரில் குமரிஅனந்தன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். காங்கிரஸ் மாநில பொதுச்செயலர் எஸ்.மலேசியாபாண்டியன், நகரத் தலைவர் என்.சுரேஷ்காந்தி, மாவட்டத் தலைவர் மூர்த்தி, வட்டாரத் தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.