முதுகுளத்தூரில் ஒன்றியக் குழுக் கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூரில் நடைபெற்ற  இக்கூட்டத்துக்கு முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி, ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. முருகன் பேசியதாவது: கமுதி,கடலாடி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் போதுமான தண்ணீர் நிரம்பாமல் இருப்பதால் மதுரையில் இருந்து வரும் காவிரி தண்ணீரை இப்பகுதிக்கு திறந்து விடக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதையடுத்து காவிரி தண்ணீரை முதுகுளத்தூர் பகுதிக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News

Read Previous

பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்குமறுவாழ்வு

Read Next

முதுகுளத்தூரில் மீலாது விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *