முதுகுளத்தூரில் அதிமுக பொதுக்கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணாவின் 106ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கடலாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர். தர்மர் முன்னிலை வகித்தார்.

ஒன்றிய துணைத் தலைவர் பத்மநாதன், அவைத் தலைவர் வேலுச்சாமி, பேரவை செயலாளர் நீதிதேவன், நகர செயலாளர் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்,

அதுபோல் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் கோடைஇடி கு.ராமு தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் கர்ணன், மாவட்ட இளம்பெண்கள் பாசறை பொருளாளர் பி. பன்னீர் செல்வம்,மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் வின்சென்ட்ரோவர், ஒன்றியப் பொருளாளர் ஆர்.கருப்புசாமி,ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கே.அர்ச்சுணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முடிவில் மீனவரணி ஒன்றியச் செயலாளர் முருகேசன் நன்றி தெரிவித்தார்.

News

Read Previous

ராமநாதபுரத்தில் சிறு, குறுந்தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

Read Next

முயன்றால் முடியாதது உண்டா

Leave a Reply

Your email address will not be published.