முதுகுளத்தூரில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தொகுதி எம்.எல்.ஏ. எம். முருகன் தலைமையில், செவ்வாய்க்கிழமை பல்வேறு கோயில்களில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
முதுகுளத்தூரில் உள்ள விநாயகர் கோயில், சுப்பிரமணியர் கோயில், செல்விஅம்மன் கோயில், அய்யனார் கோயில்களில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னர், அரசு போக்குவரத்து கழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எம். முருகன், அதிமுக கொடியினை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.
விழாவில், ஒன்றியக் குழுத் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி, மாவட்டக் கவுன்சிலர் கர்ணன், கவுன்சிலர்கள் உடை.எம். சிவக்குமார், தனசேகரன், தூரி மாடசாமி, செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் என். ரவிச்சந்திரன், வடிவேலு, அப்துல் லத்தீப், முத்துராமலிங்கம், சேதுபதி, இலக்கிய அணி இணைச் செயலர் அம்சுராஜ், மாவட்ட ஜெ. பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், விவசாய அணி இணைச் செயலர் வி. கருப்புசாமி, ஒன்றிய துணைச் செயலர் காட்டுராஜா, இளம்பெண்கள் ஒன்றிய பாசறை செயலர் மாரி, ஊராட்சித் தலைவர்கள் செந்தில்குமார், மாயக்கண்ணன், வடமலை, கூட்டுறவு சங்கத் தலைவர் அழகர்சாமி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலர் ராமலெட்சுமி,நகர் மகளீர் செயலாளர் மணிமேகலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.