மின்வாரியத்துக்கே “ஷாக்’
முதுகுளத்தூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள 250க்கும் அதிகமான கிராமங்களில் மின் இணைப்பு, பழுதுகளை சீரமைக்கும் பொருட்டு, வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த, முதுகுளத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு, 2002 ல் முதுகுளத்தூர்- பரமக்குடி செல்லும் ரோட்டில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
தற்போது சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தரைதளம் பெயர்ந்து கிடக்கிறது. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. மழை காலங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால், ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “”விரைவில் சீரமைக்க வலியுறுத்தி உள்ளோம்,” என்றார்.
Tags: மின்வாரியம் ஷாக்