மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி சாவு
முதுகுளத்தூர் அருகே சாம்பக்குளத்தில் மின்சாரம் தாக்கி கட்டட வேலை பார்த்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பக்குளத்தில் கட்டட வேலை செய்து வந்தவர் பரமக்குடிச்சேர்ந்த காந்தி மகன் திருமுருகன். செவ்வாய்க்கிழமை இவர் இரும்பு கம்பியை தூக்கியபோது அந்தக் கம்பி மின்சார கம்பியில் உரசியது.
இதில் திருமுருகன் மீது மின்சாரம் பாய்ந்து மயக்க நிலை அடைந்த அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு திருமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழத்தூவல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.