மதுபாட்டில் விற்றவர் கைது
முதுகுளத்தூர் அருகே அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
காக்கூர் சமத்துவபுரம் மஞ்சள்திடலில் கணேசன் என்பவர், அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக, முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் ஜான்சிராணிக்கு தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் சோதனையிட்டு, அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற கணேசனை கைது செய்து, அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.