மக்கள் தொடர்பு முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் தாலுகா திருவரங்கம் ஊராட்சி ஒன்றியத்தில்  புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம்  நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தக்குமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் தூய இருதய உயர்நிலைப் பள்ளியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட உதவி ஆணையர் ஆயம் சண்முகம் தலைமை தாங்கினார்.

முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டா மாறுதல், வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 62 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமிற்கு தாசில்தார் மோகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் லீலாவதி, வருவாய் ஆய்வாளர் பிரேமா, திருவரங்கம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மரியராஜ் மற்றும் அப்பகுதி கிராமத்தினர் முகாமில் கலந்து கொண்டனர்.

News

Read Previous

வேன் மோதி பள்ளி மாணவர் படுகாயம்

Read Next

மின் கட்டணத்தை அஞ்சலகங்களிலும் செலுத்தலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *