பைக் மோதியதில் பள்ளிச் சிறுமி காயம்

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே பள்ளிக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமி மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதுகுளத்தூர் தாலுகா காக்கூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கவிபாரதி (4)  யுகேஜி படித்து வருகிறார். சம்பவத்தன்று காக்கூர் யாதவர் தெருவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பள்ளியின் வாகனத்துக்காக கவிபாரதி, நின்று கொண்டிருந்த போது தஞ்சாக்கூரை சேர்ந்த காளிமுத்து மகன் முனியசாமி வந்த பைக் நிலை தடுமாறி மோதியது. இதில் கவிபாரதி பலத்த காயம் அடைந்தார். அவரை முதுகுளத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து கவிபாரதியின் தந்தை பன்னீர் செல்வம், முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் முனியசாமி மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News

Read Previous

திருமணமான 4 நாளில் பெண் கடத்தல்: கணவர் புகார்

Read Next

மலேசியாவில் பணி புரியும் பரக்கத்அலிக்கு ஆண் குழந்தை

Leave a Reply

Your email address will not be published.