பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
முதுகுளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு, பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் அவரது கணவரை கத்தியால் கீறிவிட்டு தப்பியோடி விட்டார்.
முதுகுளத்தூர் பெட்ரோல் நிலையம் எதிரே வசிப்பவர், சேதுமாணிக்கம் மனைவி பொம்மி(42). இவர் தனது வீட்டில் கணவருடன் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீடுபுகுந்து தாலிச் சங்கிலி உள்ளிட்ட 10 பவுன் நகையை பறித்துள்ளார். கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து மர்மநபரைப் பிடிக்க முயன்ற போது சேதுமாணிக்கத்தின் கையில் அந்த நபர் கத்தியால் கீறிவிட்டு தப்பிச் சென்று விட்டாராம். இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் பொம்மி கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.