பாம்பு கடித்து கூலித் தொழிலாளி சாவு
முதுகுளத்தூர் அருகே வெந்நீர் வாய்க்கால் கிராமத்தில் பாம்பு கடித்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
முதுகுளத்தூர் அருகே வெந்நீர் வாய்க்கால் கிராமத்தில் வயல்காட்டில் உள்ள பனைமரங்களை திருநெல்வேலி மாவட்டம் கரிசல்பட்டி அந்தோணி நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் டேனியல் (47) என்பவர் வெட்டிய போது புற்றில் இருந்த விஷபாம்பு கடித்து விட்டது. உடனே அவரை 108 ஆம்புலன்ஸில் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி டேனியல் உயிரிழந்தார். இது குறித்து சார்பு ஆய்வாளர் அருள்பிரகாசம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.