பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள குருவிக்காத்தி நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி நடைபெற்றது.
கடலாடி ஒன்றிய வட் டார வள மையம் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, ஒருவானேந்தல் ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ஆப் பனூர் ஊராட்சி தலைவர் முருகானந்தம், கிடாத்திருகை ஊராட்சி தலைவர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்று பேசி னார்.

வட்டார மேற்பார்வையாளர் ரமேஷ் பயிற்சி குறித்து பேசினார். ஆசி ரியர் பயிற்றுனர் மோகனவள்ளி ஏற்பாடுகளை செய்திருந்தார். மையத்திற்கு உட்பட்ட தலைமை ஆசிரியர்கள், பிடிஏ தலைவர்கள், எஸ்எம்சி தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News

Read Previous

அல்சரை போக்கும் அகத்திக்கீரை

Read Next

2015 ஜனவரி 4, முதுகுளத்தூரில் மீலாது விழா

Leave a Reply

Your email address will not be published.