பண்ணைக்குட்டைகளால் எவ்வித பயனுமில்லை விவசாயிகள் புலம்பல்

Vinkmag ad

முதுகுளத்தூர்: மழைநீரை சேமித்து, விவசாயத்தை காக்க ஏற்படுத்தபட்ட, பண்ணைக்குட்டைகளால் பலனில்லாததால், விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.ரோட்டோரங்கள், தரிசு நிலங்களில் வீணாகும் மழைநீரை சேமித்து, விவசாயத்தை காக்கும்வகையில், கிராம பகுதிகளில், நூறு நாள் வேலைத்திட்டத்தின்கீழ், விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்கபட்டது.

 

பண்ணை குட்டைகள் அமைத்ததால், கிராம மக்கள் இத்திட்டத்தின் மூலம், வருமானத்தை பெற்றனரே தவிர, பருவமழை ஏமாற்றியதால் தண்ணீரின்றி, கரிசல் நிலம்போல் விரிசலடைந்துள்ளது.

 

சவேரியார்பட்டிணம் ஜேசு கூறுகையில், “”மழைநீரை சேமிக்க, தரிசு நிலங்களில், சிறிய பண்ணை குட்டைகள் அமைக்க முன்வந்த, அரசு நிர்வாகங்கள், பிரதான ஆறுகளிலிருந்து வரத்து கால்வாய் அமைத்தால்கூட, அழிந்துவரும் விவசாயத்தை காக்கலாம். விவசாய நிலங்கள் உழவு பணி செய்ததுடன் உள்ளதால், விவசாயிகள் கலக்கத்தில் இருக்கின்றனர்,” என்றனர்.

News

Read Previous

ரூ.33.43 கோடியில் பாதாள சாக்கடை

Read Next

பூ உதிரும் சாமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *