நீர்த்தேக்கத் தொட்டி காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை
முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேட்டுக் கொண்டபடி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். கடந்த 1.1.2015இன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வயது 18 முதல் 35 வரை. பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோர் வயது 18 முதல் 32 வரை. பொதுப் போட்டியாளர் வயது 18 முதல் 30வரை. அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வு இல்லை. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பொதுப் போட்டியாளராக இருந்து முன்னுரிமையுள்ளவராக இருந்தால் பேரூராட்சி அளவில் அனைவரும் பரிந்துரைக்கப்படவுள்ளனர். மாவட்ட அளவில் கலப்புத் திருமணம் புரிந்தவர்களாக இருந்தால் 13.1.2000இன்படிபரிந்துரைக்கப்படுவர்.
இத்தகுதிகளையுடைய பதிவுதாரர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி காவலர் பணிக்கு பரிந்துரைக்கப்பட இருப்பதால் தங்களது அனைத்து சான்றிதழ்களுடனும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு திங்கள்கிழமை (மார்ச் 23) நேரில் வந்து பரிந்துரை விவரத்தினை கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.