தஞ்சாவூர் கொலையில் 7 பேர் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண்

Vinkmag ad

முதுகுளத்தூர்: தஞ்சாவூரில் நடந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையினர் 7 பேர், முதுகுளத்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த பஞ்சாபி கேசவன் என்பவரை, செந்தில்குமார் தலைமையிலான 15 பேர் கொண்ட கூலிப் படையினர், கடந்த ஜூன் 26 ல் வெட்டிக் கொலை செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படையினர் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, தேட்பட்ட கூலிப் படையைச் சேர்ந்த திருச்சணம்பூண்டி வையாபுரி மகன் செந்தில்குமார், சேகர் மகன் பாலமுருகன், பூண்டி அலமேலுபுரம் ஆசீர்வாதம் மகன் வின்சென்ட், சேகர் மகன் பாஸ்கரன், திருச்சி ராமையா மகன் ராஜா, திருச்சி கோட்டாரை சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணன், தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த காலிங்கன் மகன் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் முதுகுளத்தூர் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்களை ராமநாதபுரம் சிறையில் 15 நாள்காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் முத்து மகாராஜன் உத்தரவிட்டார்.

News

Read Previous

அனைவரும் செய்திடுவோம் !

Read Next

குவைத்தில் ‘புனிதர்களின் நந்தவனம்! பத்ர் களம் – சத்யமேவ ஜெயதே’ சிறப்பு நிகழ்ச்சி!

Leave a Reply

Your email address will not be published.