பூக்குளத்தில் அம்மா திட்ட முகாம்
முதுகுளத்தூர் தாலுகா பூக்குளம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 25 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமுக்கு தாசில்தார் மோகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் லீலாவதி, மண்டல துணை வட்டாட்சியர் சதீஸ்குமார், வருவாய் ஆய்வாளர் காசிநாதத்துரை, கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன், பூக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் மயிலேறிவேலன் மற்றும் கிராம பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.