செம்பொன்குடியில் “அம்மா’ திட்ட முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் தாலுகா செம்பொன்குடி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செம்பொன்குடி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 32 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. முகாமுக்கு வட்டாட்சியர் மோகன் தலைமை தாங்கினார்.

வருவாய் அலுவலர் முருகராஜ், கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

முடிவில் செம்பொன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் லெட்சுமணன் நன்றி கூறினார்.

News

Read Previous

இந்திய தூதரக பெண் அதிகாரி கைது – விமர்சனங்களும் ,வினாக்களும்

Read Next

ரயில் பயணிகள் அவசர உதவிக்கு புதிய தொலைபேசி எண்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *