செம்பொன்குடியில் “அம்மா’ திட்ட முகாம்
முதுகுளத்தூர் தாலுகா செம்பொன்குடி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செம்பொன்குடி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 32 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. முகாமுக்கு வட்டாட்சியர் மோகன் தலைமை தாங்கினார்.
வருவாய் அலுவலர் முருகராஜ், கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
முடிவில் செம்பொன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் லெட்சுமணன் நன்றி கூறினார்.
Tags: அம்மா செம்பொன்குடி