குதிரை எடுப்பு திருவிழா
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள பேச்சியம்மன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.முதுகுளத்தூர் அருகே நல்லூர் பேச்சியம்மன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு அபிஷேகம், ஆலய வழிபாடு போன்றவை பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள், நாடகம் நடத்தப்பட்டது.
அதே போல் காக்கூரில் அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. குதிரை எடுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. காத்தாகுளம் கிராமத்தில் கருகாளி அம்மனுக்கு முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது.