கண்ணத்தானில் “அம்மா’ திட்ட முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே உள்ள மேலக்குளம் குரூப் விளக்கனேந்தல் ஊராட்சி கண்ணத்தானில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் அருகே உள்ள கண்ணத்தானில் முதுகுளத்தூர் தாசில்தார் ஆர். ரவீந்திரநாதன் அம்மா திட்ட முகாமுக்கு தலைமை தாங்கினார்.

விளக்கனேந்தல் ஊராட்சித் தலைவர் ராமையா, உடை எம்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டாமாறுதல், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை என 49 மனுக்கள் பெறப்பட்டு அதில் 39 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முகாமில் சமூக நல பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் பவானி, மண்டல துணை வட்டாட்சியர் இந்திரா, வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் மதியழகன்,

கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி மற்றும் விளக்கனேந்தல் ஊராட்சிக்கு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

News

Read Previous

இந்திய மொழிகளின் அடித்தளம் திராவிட மொழிகளே: கி. நாச்சிமுத்து

Read Next

நீதிக் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *