கடலாடி அரசு மருத்துவமனையில் நீராவிக்குளியல்
கடலாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் தலைவலி, கை கால் உளைச்சல், தோல்வியாதி, மூட்டுவலி,போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவ நீராவிக்குளியல் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சக்கரை நோய், ரத்தக் கொதிப்பு வியாதிகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடலாடி,சாயல்குடி பகுதியில் பரவி வரும் தொற்றுநோய்கள் மற்றும் டெங்குகாய்ச்சலுக்கு 24 மணிநேரமும் மருத்துவமனையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவதாக கடலாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் பார்வதி கூறினார்.