கடம்பன்குளம்-மானாங்கரை சாலையில் பாலத்தின் அருகே மாற்றுப்பாதை இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு

Vinkmag ad

kadampangulamமுதுகுளத்தூர்,

கடம்பன்குளம்- மானாங்கரை சாலையில் பாலத்தின் அருகே மாற்றுப்பாதை போடப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வரு கின்றனர்.

சாலை

கடலாடி யூனியன் கீழச்சாக் குளம் ஊராட்சியில் கடம்பன் குளம் கிராமத்தில் இருந்து மானாங்கரைக்கு செல்லும் சாலை ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அருகில் உள்ள இடத் தில் மாற்றுப்பாதை ஏற்ப டுத்தாதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

தற்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் மாற்றுப் பாதையாக பயன்படுத்தப் படும் இடம் முழுவதும் சேறும் சகதியுமாக உருமாறிவிட்டது. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல் பவர்கள் விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே பாலத் தின் அருகில் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் புகழேந்தி கூறும் போது, கடம்பன்குளம்- மானாங்கரை சாலையில் 5 பாலங்களில் 4 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பாலத்தின் அருகில் கிரா வல் மற்றும் ஜல்லி போட்டு மாற் றுச்சாலை அமைக்கவேண்டும் என்று காண்டிராக்டரிடம் வலியு றுத் தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

News

Read Previous

பூ உதிரும் சாமம்

Read Next

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *