எஸ்.பி.கோட்டையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
முதுகுளத்தூர் அருகிலுள்ள எஸ்.பி.கோட்டை ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஆட்சியர் க.நந்தக்குமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) வினித், வட்டாட்சியர் எஸ்,ராமமூர்த்தி, கடலாடி ஆணையாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் சுந்தரராஜ் வரவேற்றார். முகாமில், பொதுமக்களிடமிருந்து 260 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், 222 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, தாலிக்கு தங்கம் வழங்கல், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை 1 கோடியே 25லட்சத்து 80 ஆயிரம் ருபாய் மதிப்பில் ஆட்சியர் வழங்கினார்.
வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார், ஆதிதிராவிட நல அலுவலர் மீனாட்சி, சிறப்பு அமலாக்கப் பிரிவு வட்டாட்சியர் துரைப்பாண்டி, மண்டல துணை வட்டாட்சியர் சம்பத், வருவாய் ஆய்வாளர் காசிநாதத்துரை, கிராம நிர்வாக அலுவலர் அன்புச்செழியன், உதவியாளர் பாலமுருகன், ஊராட்சி செயலர் எஸ்.காளிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.