எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள்

Vinkmag ad

முதுகுளத்தூர், கடலாடியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் 99 ஆவது பிறந்த விழா பொதுக்கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

  முதுகுளத்தூரில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலர் ஆர்.கருப்புச்சாமி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்  எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி, நகர அவைத் தலைவர் வி.கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 தலைமை கழக பேச்சாளர் உசேன் சிறப்புரை ஆற்றினார். அவைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.

 கடலாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுக ஒன்றிய செயலர் முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட செயலர் ஆர்.தர்மர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினர்.

தலைமைக் கழக பேச்சாளர் தீப்பொறி ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவைத் தலைவர் வேலுச்சாமி வரவேற்றார். ஒன்றியப் பெருளாளர் பழனிவேல் நன்றி தெரிவித்தார்.

News

Read Previous

தமிழர் உலகம்

Read Next

ஷார்ஜாவில் மன்சூர் சாருடன் மனம் விட்டுப் பேச …. கல கல சி(ரி)றப்பு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.