இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆலோசனை கூட்டம்

Vinkmag ad

இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆலோசனை கூட்டம்

முதுகுளத்துார்:முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் 46 ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா ஒப்படை வழங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சுகி பிரேமலா தலைமையில் தாசில்தார் மீனாட்சி முன்னிலையில் நடைபெற்றது.தாசில்தார் மீனாட்சி கூறுகையில்,” பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 42 ஊராட்சியை சேர்ந்த 151 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து ஊராட்சி செயலர்கள்,வருவாய் அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார்கள் சடையாண்டி, ஸ்ரீதர் தலைமையிடத்து துணை தாசில்தார் அமர்நாத்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா,முனியசாமி,அனைத்து வருவாய் அலுவலர்கள்,கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 46 ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.இளநிலை வருவாய் ஆய்வாளர் சிவசக்தி வரவேற்றார்.

News

Read Previous

முதுகு வலி குணமாக முத்திரை

Read Next

இல்லம் கட்டும் இளஞ்சிட்டே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *