இலவச மருத்துவ முகாம்
முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. பள்ளியில் அன்பு தொண்டு நிறுவனம் மற்றும் ஆர்.ஆர். மருத்துவமனை இணைந்து ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முதுகுளத்தூரில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இலவசமாக வீடியோ எண்டோஸ்கோப்பு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமுக்கு ஆர்.ஆர். மருத்துவமனை நிபுணர் அரவிந்தக்குமார் தலைமை தாங்கினார்.
அன்பு தொண்டு நிறுவனத் தலைவர் கோ. உமையலிங்கம் முன்னிலை வகித்தார். முகாமில் 120 பயனாளிகளுக்கு காது, மூக்கு, தொண்டைகளில் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக காதொலி மிஷின்கள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில் மருத்துவர் தன்யன்ஹர்னிதன், ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், தொண்டு நிறுவன செயலர் சதீஸ், இணைச் செயலர் மகாலிங்கம், பொருளாளர் மகேந்திரன், துணைப் பொருளாளர் துரைமுருகன் மற்றும் மருத்துவமனை உதவியாளர்கள் உள்பட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.