இடத்தகராறில் தாய்மாமனை கொலை செய்த விவசாயி கைது
முதுகுளத்தூர் அருகே இடத்தகராறில் தாய்மாமனை கல்லால் தாக்கிக் கொலை செய்த விவசாயியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள கிடாத்திருக்கையைச் சேர்ந்தவர் முத்துவழிவிட்டான்(46). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தாய்மாமன் முத்துமணிக்கும்(67) இடையே இடத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த கருவேலமரத்தை முத்துவழிவிட்டான் வெள்ளிக்கிழமை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் முத்துவழிவிட்டான் கல்லால் தாக்கியதில், முத்துமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் ஆய்வாளர் மூக்கன் வழக்குப்பதிவு செய்து முத்துவழிவிட்டானை சனிக்கிழமை கைது செய்தார்.
கமுதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் எஸ்.கணபதிசாமி உத்தரவிட்டார்.