தோப்புத்துறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்
துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் மற்றும் திருச்சி wellcare ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவமுகாம்
13/10/2013 ஞாயிறு அன்று துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் மற்றும் திருச்சி wellcare ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவமுகாம் தோப்புத்துறை ஹத்தீப் தெரு அன்னை பாத்திமா பெண்கள் அரபிக்கல்லூரியில் சிறப்புடன் நடந்தேறியது. நிகழ்ச்சிக்கு தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தலைவர் K.M.K.I நவாஸ்தீன் தலைமையேற்று நடத்திட சங்கத்தின் தாயகப்பிரதிநிதி M. நஜ்முதீன் வரவேற்பு உரை நிகழ்த்தினார். முகாமினை wellcareமருத்துவமனை நிர்வாகத்தலைவர் M.சுல்தானுல் ஆரிபீன் துவங்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் J.P.ஜமால் மெய்தீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.வேதாரணியம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் Dr. அக்பர் அலி முன்னிலை படுத்தி நடத்தி கொடுத்தார்.
முகாமில் பங்கேற்ற மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசுகலை துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் தலைவர் M.M. ஷர்புதீன்,தாயகப்பிரதிநிதிகள் A.நஜீப், S.A.S ஆரிபீன், அன்னை பாத்திமா அரபிக்கல்லூரி நிர்வாகிகள் Z. கமாலுதீன், M. ஜெய்னுதீன், சி. பஷீர் அகமது சங்கத்தின் நிர்வாகிகள்M.J. அவுலியா முகம்மத், H.K. நாசர் ஆகியோர் வழங்கினர்.
சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் M.S. முகம்மது இஸ்மாயில், H. முகம்மது மைதீன், S. ஜபருல்லா கான், J.P. முஜீப் ரஹ்மான், A. அவுலியா முகம்மது, S. ஹாஜா நஜ்முதீன், M. ஷாகுல் ஹமீது, P.S.M. ஷேக் அலாவுதீன், A. அகமது அனஸ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடனிருந்து சிறப்புடன் செய்து தந்தனர்