முருங்கைக் கீரை

Vinkmag ad

murungai

 

எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கை ஒன்று . அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. இதில் வைட்டமின் ஏ,பி,சி ஆகிய உயிர்ச் சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. குளிர்ச்சியை தரவல்லது. இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. ஆனால் இக்கீரையை சமைக்கும் முன் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். பழுத்துப் போன, பூச்சுகள் அரித்த இலைகளை எடுத்து விட வேண்டும். முதிர்ந்த கீரையை விட தளிர் கீரைகளே சாப்பிடத்தகுந்தது. கீரைகளுடன் முருங்கைப் பூக்களையும் சேர்த்துச் சாப்பிட நல்லது. பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் இதற்குண்டு. பித்த சம்பந்தமான நோயால் வருந்துபவர்கள் இக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம்.
 
சிலருக்கு குரல் வளையில் வீக்கமும் வலியும் இருக்கும். அத்தகையவர்கள் இக்கீரையை சாப்பிட வீக்கமும், வலியும் குணமாகும். வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது. உணவு எளிதில் சீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க உதவும். மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றில் வேண்டாத புழு, பூச்சிகள் இருந்தாலும் அதை மலத்துடன் வெளியேற்றும் வலிமை இந்த கீரைக்கு உண்டு. இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேருவது ஆபத்தானது. இக்கீரை இரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்க வல்லது. இரத்த அழுத்த நோயால் வருந்துபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர தொல்லை நீங்கும். இரத்தம் தூய்மைப்படும். கண் தொடர்பான எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது. கண்வலி, கண் எரிச்சல், கண்களிலிருந்து நீர் வடிதல் போன்ற தொல்லைகளைக் குணமாக்கும். பார்வை மங்கல் இருந்தாலும் போக்கும். மாலைக்கண் நோயுள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர மாலைக்கண் குறையிலிருந்து நிவாரணம் பெறலாம். 
 
தொண்டை வலி, ரணம், கரகரப்பு போன்ற தொண்டை சம்பந்தமான எல்லா நோய்களையும் நீக்க வல்லது. மூளை, நரம்புகளுக்கு வலுவைத் தரவல்லது. பித்தம் அதிகரிப்பினால் வாந்தி, கிறுகிறுப்பு உள்ளவர்கள் முருங்கைக்  கீரையைச் சாப்பிட்டு குணம் பெறலாம். வயிற்று வலியுடன் உப்புசமும் ஏற்படுவதுண்டு. அதற்கு முருங்கைக் கீரையின் சாற்றுடன் உப்பு, வசம்புத் தூளையும் சேர்த்து குழைத்து வயிற்றின் மேல் பற்றாகப் போட வலியும், உப்புசமும் சமனப்படும். குழந்தை பிறந்து பால்சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைக் கீரையைச் சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வந்தால் பால் சுரப்பி மிகுதிப்படும்.
 
முருங்கைக் கீரையை பருப்புடன் சேர்த்து சாம்பார், கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். அத்துடன் எள்ளையும், எள்ளு பிண்ணாக்கையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். இதனால் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் குணமடையும். கேழ்வரகு, களி, அடை செய்து சாப்பிடுபவர்கள் அத்துடன் முருங்கைக் கீரையையும் சேர்த்துக் கொள்வர். இதனால் வெப்பம், பித்தம் ஏற்படாமல் தவிர்க்கப்படும். முருங்கைக் கீரையை எல்லா வயதினரும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. இதனால் பலவித நோய்கள் ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கலாம்.

 

 

News

Read Previous

ஆண்களை ஆபத்தில் தள்ளாதீர்

Read Next

ஸஹர் செய்வதின் சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *