50 லட்சம் ரியால் பரிசுத் தொகையுடன் கிராஅத், அதான் போட்டிகள்…..

Vinkmag ad

50 லட்சம் ரியால் பரிசுத் தொகையுடன்
கிராஅத், அதான் போட்டிகள்…..

உலகில் மிக அதிக அளவில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ள குர்ஆன் கிராஅத் போட்டியிலும், பாங்கு அழைப்பு அதான் போட்டியிலும் பங்கேற்க சவூதி அரேபியா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

உலகில் எந்த மூலையில் உள்ளவரும் இந்த போட்டியில் பங்கேற்கலாம் என்றும், வளரும் தலைமுறையை குர்ஆனுடன் நெருக்கம் ஏற்படுத்தவும், குர்ஆனை வாசித்து அதன்படி நடந்திட தூண்டும் வகையில் இந்த போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா ராயல் கோர்ட் துணைத்தலைவர் துர்கி அல் அஷ்ஷேக் அறிவித்துள்ளார்…

இரண்டு போட்டிகளிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா 50 லட்சம் ரியால், இரண்டாவது பரிசாக 20 லட்சம் ரியால், மூன்றாவது பரிசாக 10 லட்சம் ரியால், நான்காவது பரிசாக 5 லட்சம் ரியால் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது..

போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்
quranathanawards.com
என்ற இணைய தளத்தில் ஜூலை 22 வரை தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்..
ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 23 வரை முதல் ரவுண்டு போட்டிகள் ஆண்லைன் மூலம் நடைபெறுவதாகவும், ஆகஸ்ட்24 முதல் செப்டம்பர்24 வரை நேரடி போட்டிகள் சவூதியில் வைத்து நடைபெற்று இறுதிப்போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

News

Read Previous

ஒரு யுத்த காண்டம்

Read Next

வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.