நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

Vinkmag ad
நிலவேம்பு குடிநீர் வழங்குதல் 
 
பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம்   வழங்குதல் துவக்க விழா 

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
                          நிகழ்ச்சியில்  பள்ளி மாணவர் அய்யப்பன்  வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம்   நிலவேம்புகுடிநீர் கசாயத்தை மாணவர்களுக்கு  வழங்கினார் . பள்ளி  மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் தேவகோட்டை நகராட்சி சார்பில் நிலவேம்புகுடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளது.டெங்கு தடுப்பு முறைகள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே வரும் முன் காக்கும் வகையில்  நிலவேம்பு குடிநீர்கசாயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பல்வேறு முக்கிய நோய் பதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் சுமார் 15 மி.லி .குடித்தால் போதுமானது. மாணவர்கள் அனைவருக்கும்,ஆசிரியர்களுக்கும் நிலவேம்புகுடிநீர் வழங்கப்பட்டது.நிறைவாக பள்ளி மாணவி  சிரேகா   நன்றி கூறினார்.நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சத்துணவு அமைப்பாளர் தென்றல் செய்து இருந்தார்.

News

Read Previous

கலாம் கீதம்

Read Next

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *