சிறப்பு கவிதை நிகழ்ச்சி

Vinkmag ad

அன்புடையீர் தமிழ் வணக்கம்…!

நிகழும் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ந்தேதி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம்( பதிவு எண் : 534 /2018 ) எனும் தமிழ்ச் சங்கம் இதுவரை யாரும் நிகழ்த்தாத புதிய சாதனையொன்றை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள விஜய் பார்க் எனும் நட்சத்திர விடுதியில் நிகழ்த்த உள்ளது.

உலகெங்கும் உள்ள கவிஞர்களின் கவிதைகளை ஒன்றாகத் தொகுத்து ஆயிரத்து நூறு கவிதைகள் தொகுப்பாக ஒரே நூலாக வெளியிட உள்ளது. இதனை உலக சாதனை நிகழ்வாக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதற்கான 11 தலைப்புகள் உள்ளன. ஒருவருக்கு ஒரு கவிதை எனவும் குறைந்த பட்சம் 16 வரிகளும் அதிகபட்சமாக 22 வரிகளும் எனவும் முடிவு செய்துள்ளது.

1.தமிழும் நானும்
2.உணர்த்திப் போகும் உறவுகள்
3.விதி மாற்றும் விதி
4.மதிப்பிற்குரிய பெண்மை
5.சமூகத்தின் முகம்
6.ஆண்களுக்கும் நீதி வேண்டும்
7 மீண்டும் கற்காலம் போவோம்
8.கல்வி இன்று கடைத் தெருவில்
9.உலகமே உதயம் எதனில்
10.காதலென்றால்
11.விவசாயி நம் உயிர் நாடி

இவ்விழா பல சிறப்பு பெற்ற பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கவியியற்றிய ஒவ்வொருவருக்கும் ஒரு சாதனை நூல், ஒரு சாதனை விருது மற்றும் ஒரு சாதனை சான்றிதழ் என வழங்கி சிறப்பு செய்ய உள்ளது.

இதற்காக குறைந்த பட்சமாக ரூபாய் 1000 / மட்டும் நிர்ணயம் செய்துள்ளது. ஆகவே தமிழார்வலர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் ஆசிரியர் பெருமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறேன்.

இங்ஙனம்
இரா. முருகன்
விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைப்பாளர்

மேலும் தொடர்புக்கு :

கவிஞர் ரித்துசூர்யா
கைபேசி எண் : 90429 17115
தலைவர்

கவிஞர் என். ஜாகிர் உஷேன்
கைபேசி எண்கள்
8778007208 அழைப்பிற்கு
9952991250 தகவல் பரிமாற்றத்திற்கு

News

Read Previous

பேராசிரியை நசீமா பானு

Read Next

காய்கறி வைத்தியமுறை

Leave a Reply

Your email address will not be published.