ஜுலை 15, சென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா

Vinkmag ad
ஜுலை 15, சென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா
சென்னை : சென்னை, மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஃமூர் வளாகத்தில் 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் அமானத் அறக்கட்டளை வெளியிடும் O.M. அப்துல் காதிர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் எழுதிய திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.
இந்த விழாவுக்கு மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமாம் மௌலவி ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ் காஸிமி தலைமை வகிக்கிறார். திருச்சி காதர் மஸ்ஜித் இமாம் மௌலவி எஸ். முஹம்மது மீரான் மிஸ்பாஹி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
வலங்கைமான் ஜமாலி ஹிஃப்ளூ கல்லூரி மௌலவி இசட். தமீமுல் அன்சாரி மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்துகிறார். சென்னை சாந்தோம் மஸ்ஜித் தக்வா இமாம் மௌலவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ அறிமுகவுரை நிகழ்த்துகிறார்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் மௌலவி வி.எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி, இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் முனைவர் பேராசிரியர் சேமுமு. முகமதலி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், அரேபியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் கே. நவாஸ் கனி, இந்திய தேசிய லீக் தமிழ்நாடு பிரிவின் தலைவர் அல்ஹாஜ்  கே.எஸ்.ஓ.எம். பஷீர் அகமது, எல்.கே.எஸ் கோல்டு ஹவுசின் அல்ஹாஜ் எஸ். செய்யது அஹமது உள்ளிட்ட பலர் பிரதிகளைப் பெறும் அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் சபையின் கௌரவத் தலைவர் அல்லாமா பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி, சென்னை மதரஸா காஷிபுல் ஹுதா அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி எம். முஹம்மது இப்ராஹிம் பாகவி, சென்னை மஸ்ஜிதே மஃமூர் இமாம் மௌலவி கே.ஏ. அப்துல் ரஹ்மான் பாழில் ரஹ்மானி உள்ளிட்ட ஆன்மிக ஆசான்கள் பிரதிகளை வெளியிடுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாம் அமர்வில் மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவி, மௌலவி எம். சதீதுத்தீன் பாகவி, மௌலவி எம். அபூதாஹிர் பாகவி உள்ளிட்டோர் உரை நிகழ்த்த இருக்கின்றனர்.t1 t2 t3 t4

News

Read Previous

காற்று வெளியிடை..

Read Next

அறிவாளிகள் மத்தியில் இப்படியும் புரியாத உலகம்.

Leave a Reply

Your email address will not be published.