முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்  !

Vinkmag ad

முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்  !

முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்  !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாமேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்         மெல்பேண் …. ஆஸ்திரேலியா ஓடிய கால்கள் உழைத்திட்ட கைகள்தேடியே செல்வம் திரட்டிய உள்ளம்வாடியே நில்லா வதங்கிடா வதனம்வதங்கியே மூலை இருப்பது முறையாதூக்கிய சுமைகள் சுகமென வெண்ணிசாப்பிடு நேரம் தனையுமே மறந்துகாப்பிடு நோக்கில் களிப்புற்ற உள்ளம்கண்ணீரை உகுப்பது கருணையின் நிலையா தடுக்கியே விழுவதை தடுத்திட நினைத்துஅணைத்திடும் நோக்கில் அன்பினைச் சொரிந்துவிடுப்புகள் இழந்து விருந்துகள் கொடுத்தவியப்புடை உள்ளம் வேதனை உறுவதா விடியலை வழங்க விரைத்திட்டார் நாளும்தலையிடி என்று தவிர்த்திலார் வாழ்வில்உலையிடை பட்ட இரும்பென உருகி உழைத்தவர் இப்போ உழலுறார் வாழ்வில்தோழினிற் ஏற்றி சாமியைக் காட்டினார்தோழனாய் மாறி சுறுசுறுப் பூட்டினார் வாழ்வினில் வசந்தம் காட்டிட முனைந்தார்வதங்கிய நிலையில் இருப்பது முறையாகைபிடித் தழைத்து பள்ளியில் சேர்த்தார்கணக்கொழுத் தென்று பலபல காட்டினார்மெய்யினில் வருத்தம் மேவிடா நின்றார்மேதினி மீதினில் விக்கித்து நிற்கிறார்கற்பனை பலபல கண்டுமே நின்றார்கற்றவர் அவையினில் நிற்கவும் வைத்தார்நிற்பதும் நடப்பதும் நெஞ்சுரம் என்றார்நிற்கவே முடியா கிடக்கிறார் இப்போ பள்ளியின் வாசலைப் பார்த்துமே நிற்பார்துள்ளியே வந்ததும் தூக்கியே கொஞ்சுவார்அள்ளியே அணைத்து அன்பினைப் பொழிவார்அள்ளியே அணைத்திடா அவரிப்போ தவிக்கிறார் அம்மாவும் அப்பாவும் பாட்டியும் தாத்தாவும்அன்புடை மாமியும் மாமாவும் இப்போ அழகெலாம் குலைந்து அயர்விலே உழன்றுஆறுதல் தேடுறார் அவர்நிலை உணர்வோம்
காவோலை விழுவதும் குருத்தோலை சிரிப்பதும்காதாலே கேட்க களிப்பாக இருக்கும்காலத்தின் மாற்றம் எப்போதும் நிகழும்களிப்பினைத் தந்தவர் கண்ணீரைத் துடைப்போம் 
முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்ஒதுக்கிட நினைத்தல் உயர்குணம் அன்றுஅவரது ஆசியை அனைவரும் பெறுவோம்ஆண்டவன் எமக்கு அருளினை அளிப்பான் 

News

Read Previous

செங்கல் பேசுகின்றது

Read Next

குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *