முதுகுளத்தூரில் உலமா – உமரா கலந்தாய்வு கூட்டம்
முதுகுளத்தூரில் உலமா – உமரா கலந்தாய்வு கூட்டம்
முதுகுளத்தூர் :
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்&கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்
முன்மாதிரி முஹல்லாவை உ௫வாக்கிட
உலமா-உமரா கலந்தாய்வு கூட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில்
04.01.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் மௌலானா P.A.காஜா முயீனுத்தீன் பாகவி அவர்களும்
இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜலாலுத்தீன் அன்வாரி ஹழ்ரத்
இராமநாதபுரம் மாவட்ட தலைவர் மௌலானா அஹ்மது இப்றாஹீம் பாஜில் தேவ்பந்தி அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றினர்*
மௌலவி பஷீர் சேட் ஆலிம் மன்பயீ அறிமுக உரையாற்ற,
மாவட்ட பொருளாளர் மௌலானா
முஹம்மது சாஹிப் பைஜி வரவேற்புரையாற்றினார்கள்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆர்வத்தோடு பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
மாவட்ட, வட்டார ஆலிம்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
மௌலவி J.S.S.அலி பாதுஷா மன்பயீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்