பத்மஸ்ரீ டாக்டர் சித்திக் அவர்களுக்கு பாராட்டு விழா
இளையான்குடியில் பிறந்து வேளாண் விஞ்ஞானியாக உயர்ந்து அரிசி ஆராய்ச்சியில் பலவிதமான புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் தேசிய பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் சித்திக் அவர்கள். ஆந்திராவில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தால் சமீபத்தில் டாக்டர் சித்தீக் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இளையான்குடியில் உள்ள கல்வி நிலையங்களுக்கும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கும் பல்வேறு உதவிகளை டாக்டர் சித்திக் அவர்கள் செய்துள்ளார்கள். வேளாண் விஞ்ஞானி அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6:30 மணி அளவில் சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள ஹோட்டல் சென்னை பேலஸில் பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கின்றோம்.