தேரிருவேலியில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் உள்ள தேரிருவேலியில் நேற்று சனிக்கிழமை (24-06-2023) காலை 10 மணிக்கு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி!
உயர் கல்வி கற்பதின் அவசியம் மற்றும் அதன் வழிமுறைகளையும், படிக்கும் காலத்தில் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் பற்றியும் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் நிறுவனர் S.சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கு விளக்கினார்.
இராவுத்தர் சாஹிப் மேல்நிலை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.