துபாயில் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்

Vinkmag ad

துபாய்: கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கணைசேஷனின் (KEO – கூத்தாநல்லூர் ஜமாஅத்) வருடாந்திர பொதுக் குழு கூட்டம் 20.04.2012 வெள்ளி மாலை 05:30 மணிக்கு தேரா அன்னபூர்ணா ஹோட்டலில் நடைபெற்றது.

KEO வின் தலைவர் ஜனாப் ஹாஜி கழனி அஹமது மைதீன் அவர்கள் முன்னிலையில், ஜனாப் P. M. A. ஹாஜி முஹம்மது சிராஜுதீன் அவர்கள் கூட்ட தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தினர்.

கூட்டத்தில் 2010 – 2011 வருடத்திய ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டது.

ஊரின் வளர்ச்சி மற்றும் ஆக்கப்பணிகள் குறித்து உறுப்பினர்கள் தங்களது மேலான ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவித்தனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக ஜனாப் P.A. ரஃபீக் முஹம்மது அவர்கள், செயலாளராக ஜனாப் அல்வாணி அக்பர் அலி அவர்கள் மற்றும் பொருளாளராக ஜனாப் S. M. H. பாவா முஹையதீன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டம் இரவு உணவிற்கு பிறகு இனிதே நிறைவுற்றது.

News

Read Previous

சவுதி செந்தமிழ் மன்ற சித்திரை கொண்டாட்டம்

Read Next

துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.