ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு
ஜூலை 3, ஷார்ஜாவில் தமிழ் கவிதை நூல் வெளியீடு
ஷார்ஜா :
ஷார்ஜாவில் மலையாள எழுத்தாளர் இஸ்மாயில் மேலடிஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு நடக்க இருக்கிறது.
இந்த விழா வரும் 03 ஜூலை 2022 ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை 9.30 மணி முதல் 12 மணி வரை ஷார்ஜா ரோலா பகுதியில் உள்ள ஷார்ஜா பேலஸ் ஓட்டலில் நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு துபாய் சங்கீதா உணவகத்தின் பங்குதாரர் முஹிப்புல் உலமா அல்ஹாஜ் ஏ. முஹம்மது மஃஹ்ரூப் தலைமை வகிக்கிறார்.
கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சமூக ஆர்வலர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் முன்னிலை வகிக்கிறார்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், தமிழ்த்துறை தலைவருமான முனைவர் பேரா. பீ. மு. மன்சூர் நூல் வெளியிட்டு சிறப்புரை வழங்க இருக்கிறார். இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் விழாப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்.
துபாய் அல் ரீம் குழுமத்தின் தலைவர் இளையான்குடி அபுதாஹிர், பிரபல் எழுத்தாளரும், நாடக, குறும்பட இயக்குநருமான சசி. S. குமார், கவிஞர்
வழுத்தூர் ஜா. முஹையதீன் பாட்சா, இலங்கை செம்மொழி எப்.எம்.
பிரதிநிதி மௌலவி சுபையிர் அஹில் முஹம்மது, ராசல்கைமா கவிஞர் மதுக்கூர் ஹிதாயத்துல்லா, ராஜகிரி முஹம்மது இக்பால், கீழை எஸ்.கே.வி. ஷேக்,காயல் ஏ. அஹமது சுலைமான் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் பலர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.
ஆங்கில மூல நூலின் ஆசிரியர் இஸ்மாயில் மேலடி ஏற்புரை வழங்க இருக்கிறார்.
மெலும் விபரங்களுக்கு விழாவின் ஏற்பாட்டாளர் முதுவை ஹிதாயத்தை +971 50 51 96 433 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.