குருவிகளுக்கு கூடு உண்டு !
குழலினும் இனிய குரல் ஓசை உடைய
குழந்தைகளுக்கு வீடு இல்லையே !
உயர்வு தாழ்வு உலகில்
இன்னும் மாறவில்லையே !
உணவு அற்று கிடக்கும் உயிர்களை
கவனிக்க உலகில் மனிதம்
பிறக்கவில்லையே !
வறுமையை விரட்ட வழி
கிடைக்கவில்லையே !
கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி